ETV Bharat / bharat

ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா... லட்சத்தீவில் திடீர் திருப்பம்

author img

By

Published : Jun 14, 2021, 2:31 AM IST

நடிகை ஆயிஷா மீது தேச துரோகம் வழக்குப் பதிவு செய்ததற்கு எதிராக, பாஜக பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது முள்ளிப்புழா உள்பட மொத்தம் 15 பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.

Sedition case against Aisha Sultana  Lakshadweep BJP leader quit party  Lakshadweep  Lakshadweep bjp  Lakshadweep political crisis  Aisha Sultana  Sedition case against Aisha Sultana  நடிகை ஆய்ஷா  பாஜக தலைவர்கள் ராஜினாமா  ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா  தேச துரோகம் வழக்கு  பிரபுல் பட்டேல்
ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா...லட்சத்தீவில் திடீர் திருப்பம்

லட்சத்தீவு: 2020 டிசம்பரில் லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட படேல் அறிமுகப்படுத்திய புதிய சீர்திருத்தங்கள் தொடர்பாக கடந்த சில நாள்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தீவுவாசிகளின் நலனுக்கு எதிரானது என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் லட்சத்தீவு தடுப்பு (கூண்டா சட்டம்), லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் லட்சத்தீப் பஞ்சாயத்து ஒழுங்குமுறை 2021 போன்ற வரைவு சட்டங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவின் விவகாரம் குறித்து பிரபல நடிக்கை மற்றும் இயக்குனரான ஆயிஷா சுல்தானா பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரபுல் பட்டேலை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அதில் பிரபுல் பட்டேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்ட பயோ ஆயுதம் என்று பேசியிருந்தார். மேலும் லட்சத்தீவில் கரோனாவை பரப்புவதற்காகவே ஒன்றிய அரசு பிரபுல் பட்டேலை நிர்ணயம் செய்யப்படுள்ளதாகவும் ஆயிஷா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து லட்சத்தீவில் பாஜக தலைவர் அப்துல் காதர், ஆயிஷாவின் மீது மத்திய அரசினை விமர்சித்தற்காக புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்பட்யையில் ஆய்ஷா சுல்தானா மீது காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேலை பயோ ஆயுதம் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அரசை விமர்சித்ததற்காக தேசத்துரோகம் வழக்குப் பதிவு செய்ததற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந் நிலையில், ஆயிஷாவிற்க்கு ஆதரவாக பல்வேறு பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தையும், வியப்பையம் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்தீவு பாஜக பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது முள்ளிப்புழா உள்பட மொத்தம் 15 பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் வழங்கிய ராஜினாமா கடிதத்தில், லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதரிடம் அவர்கள் வழங்கியுள்ள கடிதத்தில், ஆய்ஷா மீது நியாயமற்ற பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல் மக்களுக்கும், ஜனநாயகத்தும் விரோதமாக செயல்பட்டு மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்- உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.